Sunday 14 May 2017

Pori urundai


வாழைப்பழ பஜ்ஜி


வாழைப்பழ பஜ்ஜி
 

தேவையான பொருட்கள்:

1.       நேந்திரம் பழம் – 1

2.       மைதா மாவு – 1 கப்

3.       உளுந்து மாவு – ½ கப் (ஊற வைத்து அரைத்தது)

4.       கேசரி பவுடர் – ¼ ஸ்பூன்

5.       எண்ணை தேவைக்கேர்ப.

செய்முறை:

1.      மைதா மாவு மற்றும் உளுந்து மாவை கேசரி பவுடர் சேர்த்து கலவை செய்து கொள்ளவும்.

2.      நேந்திரம் பழத்தை தேவையான அளவுகளில் வெட்டி வைத்து கொள்ளவும்.

3.      பழத்துண்டுகளை மாவு கலவையில் முக்கி எண்ணையில் இட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான வாழைப்பழ பஜ்ஜி ருசிபதற்கு தயாராகிவிடும்.

இலை அடை


இலை அடை
 

தேவையான பொருட்கள்:

1.      அரிசி மாவு – 2 கப்

2.      தேங்காய் துருவல் – 1 கப்

3.      வெள்ளை எள் – ½ கப்

4.      வெல்லம் – ½ கப்

5.      ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்

6.      தண்ணீர் மற்றும் எண்ணை தேவைக்கேர்ப.

செய்முறை:

1.      வெள்ளை எள்ளை பொடித்து கொள்ளவும். அதை தேங்காய் துருவல் மற்றும் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்து வைக்கவும்.

2.      அரிசி மாவில் வெந்நீர் சேர்த்து பிசையவும்.

3.      வாழை இலையில் எண்ணை தடவி, மாவில் தேங்காய் கலவை வைத்து இட்லி குக்கரில் வேக வைக்கவும்.

தேங்காயின் பயன்கள்

 
பச்சை தேங்காயின் பயன்கள்:
 
 


               >தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
 
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
 
# தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......
# சகலவிதமான நோய்களையும்      குணமாகக்கும்....
# உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
# இரத்தத்தை சுத்தமாக்கும்...
# உருப்புகளை புதுப்பிக்கும்......
 
               >தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை......              
                           நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
 
குறிப்பு :
             காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...
 
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...

Saturday 13 May 2017

சித்த வைத்தியம் பகுதி - 1

*சித்த வைத்தியம் 🌿*
*உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்*
_உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்_
*கட்டைவிரல்*
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
*ஆள்காட்டிவிரல்*
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது
ஆள்காட்டி விரல் மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
*நடுவிரல்*
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
*மோதிரவிரல்*
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
*சிறுவிரல்*
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
*உள்ளங்கை*
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
_வாழ்க வையகம், வாழ்க தமிழ், வாழ்க வளமுடன்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
"யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்"

இயற்கை மருத்துவம் பகுதி - 1

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!


  • வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
  • முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
  • இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
  • மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
  • காது மந்தம் போக்கும் தூதுவளை!
  • மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
  • பித்த மயக்கம் தீர புளியாரை!
  • உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
  • நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
  • இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
  • கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
  • கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
  • வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
  • கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
  • இளைத்த உடல் பெருக்க மிளகு!
  • பொடுகைப் போக்க தயிரில் குளி!
  • மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
  • இதயப் பலவீனம் போக்க மாதுளை!
  • வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
  • காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
  • பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
  • பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
  • வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
  • மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
  • மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
  • கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
  • மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
  • மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

Coconut oil making